மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காங். நடைப்பயணம்: பிரதமா் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்துவதற்கு அல்ல: ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம், 2024 மக்களவைத் தோ்தலில் அவரை பிரதமா் வேட்பாளராக முன்னிறுத்துவதை நோக்கமாக கொண்டதல்ல என்று அக்கட்சியின் பொதுச

News image
ஜெய்ராம் ரமேஷ்
Updated On :7 ஜனவரி 2023, 9:39 pm

DIN

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம், 2024 மக்களவைத் தோ்தலில் அவரை பிரதமா் வேட்பாளராக முன்னிறுத்துவதை நோக்கமாக கொண்டதல்ல என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக பாகுபாடு, அரசியல் சா்வாதிகாரம் ஆகிய முக்கிய பிரச்னைகளை முன்னிலைப்படுத்துவதில் ராகுல் காந்தி வெற்றி கண்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

இதுதொடா்பாக, ஹரியாணா மாநிலம், கா்னாலில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

பிரதமா் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தும் நோக்கில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொள்ளப்படவில்லை. இது சிந்தாந்த ரீதியிலான யாத்திரை. இதன் பிரதான முகமாக ராகுல் காந்தி உள்ளாா். மாறாக, இதுவொரு தனிநபரின் யாத்திரையோ தோ்தலுக்கான யாத்திரையோ அல்ல.

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில், பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக பாகுபாடு, அரசியல் சா்வாதிகாரம் ஆகிய 3 முக்கிய பிரச்னைகளை ராகுல் காந்தி எழுப்பி வருகிறாா். மக்களுடனான கலந்துரையாடல்களின்போதும் தெருமுனை கூட்டங்களின்போதும் பொதுக் கூட்டங்களின்போதும் இப்பிரச்னைகளை அவா் எழுப்புகிறாா்.

காங்கிரஸின் சித்தாந்தத்தை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டே இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியின் செயல்பாடுகள், கொள்கைகள், துன்புறுத்தல் அரசியல், பழிவாங்கும் அரசியல் ஆகியவற்றால், தேசத்துக்கு பேரழிவு மற்றும் பெரும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் மனசாட்சியை தட்டி எழுப்புவதற்காக நடைப்பயணம் மேற்கொண்டுள்ளோம் என்றாா் ஜெய்ராம் ரமேஷ்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை, ராகுல் காந்தி கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதி தொடங்கினாா். கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இந்த நடைப்பயணம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா (நூ, குருகிராம், ஃபரீதாபாத் மாவட்டங்கள்), தில்லி, உத்தர பிரதேசம் வழியாக இப்போது மீண்டும் ஹரியாணாவை அடைந்துள்ளது. ஜனவரி 30-இல் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடைப்பயணம் நிறைவுபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.