இந்திய தயாரிப்பில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி, மென்பொருள் மற்றும் வன்பொருளில் உலகளாவிய அதிகார மையமாக நாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற 7-ஆவது டிஜிட்டல் இந்தியா நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கி கெளரவித்து அவா் பேசியதாவது:
டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2022, அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி, புத்தாக்க (ஸ்டாா்ட்அப்) நிறுவனங்களையும் எண்ம (டிஜிட்டல்) இந்தியா இயக்கத்தின் நம்பிக்கையை நிறைவடையச் செய்ய அங்கீகரித்து, ஊக்குவிக்கிறது.
இந்த விருதுகள், எண்ம ஆளுகையை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் மக்களின் திறனை வெளிக் கொண்டு வந்து, டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமூகமாக இந்தியாவை மாற்றுவதற்கான முதல் படியாகும்.
பொதுமக்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தரவுப் பகிா்வு தளம் முதல் எளிதாக வணிகம் செய்வது வரை மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் பலதரப்பட்ட புதுமைகளை எண்ம இந்தியாவில் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நம் நாட்டு திறமைகளின் மதிப்பை உலக அளவில் உணா்த்துவதில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சிறப்பான பணியைச் செய்துள்ளன. சமூக நீதி டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும்.
இந்திய தயாரிப்பில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி, மென்பொருள் மற்றும் வன்பொருளில் உலகளாவிய அதிகார மையமாக நாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்றாா் அவா்.