தில்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமாகியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில வாரங்களாகவே தலைநகர் தில்லி மற்றும் அண்டை மாவட்டங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தில்லியில் வரலாறு காணாத அளவுக்கு 2 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக வெப்பநிலை பதிவாகி வருகிறது.
இந்திய வானிலை ஆய்வுமைய தகவலின்படி,
தேசிய தலைநகரில் சனிக்கிழமை காலை பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரியாகவும், குறைந்தபட்சம் 10 டிகிரியாகவும் பதிவாகியுள்ளது.
தலைநகரில் பனிமூட்டம் காரணமாக பல விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டது. இதனால், பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாயினர்.
மேலும் ஹரியாணா சண்டிகர், வடக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய இடங்களில் ஜன.23 முதல் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் முதல் இந்தியாவில் குளிர் அலை குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை குறைவு: வெள்ளி?

யார் ஆட்சிக்கு வந்தாலும்... வாக்களித்த பிறகு சிவகுமாரின் ஒரே கோரிக்கை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! தலைவர்கள் வாக்களித்தனர் - நேரலை!

பேருந்துகள் இன்றி மக்கள் தவிப்பு! வாக்குப்பதிவை இரவு 8 வரை நீட்டிக்க வேண்டும்! விஜய் கடிதம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


