தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

'பதான்' ரிலீஸ் குறித்து ஷாருக்கானிடம் பேசியது என்ன? அசாம் முதல்வர் விளக்கம்

''பதான்'' வெளியீடு குறித்து பேச வேண்டும் என ஷாருக்கான்தான் முதலில் குறுஞ்செய்தி அனுப்பியதாக அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா விளக்கம் அளித்துள்ளார். 

News image
கோப்புப் படம்
Updated On :23 ஜனவரி 2023, 1:23 pm

DIN


''பதான்'' வெளியீடு குறித்து பேச வேண்டும் என ஷாருக் கான்தான் முதலில் குறுஞ்செய்தி அனுப்பியதாக அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா விளக்கம் அளித்துள்ளார். 

அவர் மாலை 7.40 மணிக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், பணிகளை எல்லாம் முடித்துவிட்டு அதிகாலை 2 மணிக்கு ஷாருக்கானுடன் தொடர்புகொண்டு பேசியதாகவும் குறிப்பிட்டார். 

ஷாருக்கான் - தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள 'பதான்' திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலில் தீபிகா படுகோன் காவி நிற உடை அணிந்து ஷாருக்கானுடன் நடனமாடும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

இதற்கு ஹிந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 'பதான்' திரைப்படத்தை வெளியிடக் கூடாது என பாஜக தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில், திரைப்பட வெளியீட்டையொட்டி அசாம் முதல்வருடன் நடிகர் ஷாருக்கான் தொலைப்பேசி வாயிலாகத் தொடர்புகொண்டு நேற்று பேசினார். இந்நிலையில் ஷாருக்கானுடன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா விளக்கமளித்துள்ளார். 

அவர் பேசியதாவது, ஷாருக்கான் குறுஞ்செய்தி மூலம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு என்னுடன் பேச வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். என்னுடன் பேச விரும்புவதாக தொடர்ந்து பல குறுஞ்செய்திகள் அனுப்பினார். அதனால் என்னுடைய பணிகளை முடித்துக்கொண்டு 
அதிகாலை 2 மணியளவில் ஷாருக்கானை தொடர்புகொண்டு பேசினேன். 

தனது திரைப்படம் வெளியாவதையொட்டி எந்தப் பிரச்னைகளும் எழாமல் பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டார். என்ன படம் என்று கேட்டேன். 'பதான்' என்று திரைப்படத்தின் பெயரைச் சொன்னார். உங்கள் திரைப்படம் வெளியாவதால், எந்த பிரச்னைகளும் எழாது என்று உறுதியளித்தேன். 

எனக்கு திரைப்படங்களில் அதிக ஆர்வமில்லை. எனது இளைமைப் பருவத்தில் இருந்த நடிகர்களைத்தான் எனக்குத் தெரியும். ஷாருக் கான் யார் எனத் தெரியாது. எங்களுடைய தொலைப்பேசி உரையாடல் இணையத்தில் வைரலானதை அறிந்தேன். எண்ணற்ற 'பதான்'கள் வரும், போகும். கவனம் செலுத்த வேண்டிய பல பிரச்னைகள் மாநிலத்தில் உள்ளன எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.