தில்லி அரசு சார்பில் விரைவில் இ-ஸ்கூட்டர் சேவை: முதல்வர் அரவிந்த் கேஜரிவால்

தில்லி அரசு சார்பில் விரைவில் இ-ஸ்கூட்டர் சேவை தொடங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 
தில்லி அரசு சார்பில் விரைவில் இ-ஸ்கூட்டர் சேவை: முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
Published on
Updated on
1 min read

தில்லி அரசு சார்பில் விரைவில் இ-ஸ்கூட்டர் சேவை தொடங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மெட்ரோ நிலையங்களோ, பேருந்து நிறுத்தங்களோ இல்லாத துவாரகாவில் இ-ஸ்கூட்டர் திட்டம் முதலில் தொடங்கப்படும். அதன்பின், அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடங்கள் கண்டறியப்படும். 

இந்த ஸ்கூட்டர்கள் தாமாக இயங்கும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை செல்லும். நாங்கள் பொது போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தி, அதிக பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். 

தற்போது இந்த இ-ஸ்கூட்டர் வசதி மூலம், தொலைதூர இலக்கை அடைவதில் இருக்கும் சிக்கலையும் தீர்ப்போம் என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com