மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரூ.366 கோடி ஜிஎஸ்டி முறைகேடு செய்ததாக சாலையோர வியாபாரி மீது புகார்: என்ன நடந்தது?

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகரைச் சேர்ந்த சாலையோர வியாபாரி மீது, ரூ.366 கோடி ஜிஎஸ்டி முறைகேடு செய்திருப்பதாகக் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
ரூ.366 கோடி ஜிஎஸ்டி முறைகேடு செய்ததாக சாலையோர வியாபாரி மீது புகார்: என்ன நடந்தது?
Updated On :28 ஜனவரி 2023, 12:19 pm

DIN


ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகரைச் சேர்ந்த சாலையோர வியாபாரி மீது, ரூ.366 கோடி ஜிஎஸ்டி முறைகேடு செய்திருப்பதாகக் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாலையோரம் துணிகளை விற்று நாள்தோறும் ரூ.500 வருவாய் ஈட்டிவரும் வியாபாரியை, ஜிஎஸ்டி அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துள்ளனர்.

எஸாஸ் அகமது என்ற அந்த வியாபாரி, ஜிஎஸ்டி அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து தனது நிலையை தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பழைய இரும்புச் சாமான்களை வாங்கும் கடையை அவர் தொடங்கியிருக்கிறார். அப்போது ஜிஎஸ்டி எண் வாங்கியிருக்கிறார். நாள்தோறும் ரூ.500 முதல் 1000 ரூபாய் வரை வருமானம் வந்துள்ளது. பிறகு அது நட்டத்தில் போனதால், அந்தக் கடையை மூடிவிட்டு, சாலையோரம் துணி விற்பனை செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போதே, தனது ஜிஎஸ்டி எண்ணை முடித்துக் கொடுக்குமாறு சார்ட்டர்ட் அக்கவுண்ட்டிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அதன்பிறகு அந்த எண்ணை அவர் பயன்படுத்தவும் இல்லை.

தற்போது, அந்த எண்ணைப் பயன்படுத்தி யாரோ முறைகேடு செய்திருப்பதாகக் குற்றச்சாட்டுப் பதிவாகி, அதற்காக ஜிஎஸ்டி அதிகாரிகள் அகமது வீட்டின் கதவைத் தட்டியிருக்கிறார்கள்.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், இந்த ஜிஎஸ்டி எண்ணைப் பயன்படுத்தி சுமார் ரூ.300 கோடிக்கு மேலான பொருள்களுக்கு ரசீது வழங்கப்பட்டுள்ளது. அப்படிப்பார்த்தால் இது மிகப்பெரிய மோசடி என்றும் இதன் கீழ் பல நிறுவனங்களும், பல மோசடி கும்பல்களும் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

சாலையோர வியாபாரியின் வீட்டையும் காவல்துறையினர் சோதனை நடத்தியிருக்கிறார்கள். இதுபோல வேறொருவருடைய பயன்படுத்தாத ஜிஎஸ்டி எண்ணைக் கொண்டு மோசடிகள் நடைபெற்று வருவது அதிகரித்திருப்பதால், வியாபாரிகளுக்கு காவல்துறையினர் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.