யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹிமாசலில் கனமழை: விடியோ அழைப்பில் நடந்த திருமணம்!

ஹிமாசலில் தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், விடியோ அழைப்பு மூலம் இரு குடும்பத்தார் திருமணம் செய்துகொண்டனர். 

News image
Updated On :14 ஜூலை 2023, 6:20 am

DIN

ஹிமாசலில் தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், விடியோ அழைப்பு மூலம் இரு குடும்பத்தார் திருமணம் செய்துகொண்டனர். 

பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வடமாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 

ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், ஹரியாணா, தில்லி, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. 

தொடர் மழையால் ஹிமாசலின் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. சில சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.  முக்கிய நகரங்களின் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 

இந்நிலையில், சிம்லா மாவட்டத்திலுள்ள இரு குடும்பத்தினர் விடியோ அழைப்பு மூலம் திருமணம் செய்துகொண்டனர். 

மணப்பெண்ணும் அவரின் குடும்பத்தினரும் குல்லூ பகுதியிலுள்ளதால், திருமணத்திற்கு சிம்லா பகுதிக்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் திருமண வீட்டார் ஆலோசித்து, விடியோ அழைப்பு மூலம் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்துள்ளனர். 

அதனைத் தொடர்ந்து சிம்லாவிலிருந்த மணமகன் ஆஷிஷ் சின்ஹாவும் குல்லூ பகுதியிலிருந்த ஷிவானி தாக்குரும் விடியோ அழைப்பில் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர். 

மழையால் பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விடியோ அழைப்பில் நடந்த திருமணத்தின் விடியோவை இணையத்தில் பலர் பகிர்ந்து தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.