யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹிமாசலில் வெள்ளம்: 6 பேர் பலி; 10 பேர் காயம்

ஹிமாசலில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 6 பேர் பலியாகியுள்ளனர்.

News image
Updated On :26 ஜூன் 2023, 10:52 am

DIN

ஹிமாசலில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 6 பேர் பலியாகியுள்ளனர்.

ஹிமாசலில் வழக்கமாக பருவமழை தொடங்குவதைக் காட்டிலும் சற்று முன்னதாகவே பருவழை தொடங்கி மாநிலத்தில் கனமழை பெய்ததுள்ளது.

சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. திடீரென்று பெய்த கனமழையில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 10 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹிமாசல பிரதேசத்தின் பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலாளர் ஒன்கர் சந்த் ஷர்மா கூறுகையில், "இதுவரை வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 303க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளன.

இந்த கனமழையால் அரசுக்கு ரூ.3 கோடி இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, 2 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 124 சாலைகள் சேதமடைந்துள்ளது.

மேலும், மண்டி - பண்டோ பகுதியில் ஏராளமான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளது. எனவே வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மண்டி-பராஷர் பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஹிமாசல் மாநிலத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு விடுக்கப்பட்ட மழை எச்சரிக்கை தொடரும்" என்று ஒன்கர் சந்த் ஷர்மா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.