விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஹிமாசலில் வெள்ளம்: 6 பேர் பலி; 10 பேர் காயம்

ஹிமாசலில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 6 பேர் பலியாகியுள்ளனர்.

News image
Updated On :26 ஜூன் 2023, 10:52 am

ஹிமாசலில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 6 பேர் பலியாகியுள்ளனர்.

ஹிமாசலில் வழக்கமாக பருவமழை தொடங்குவதைக் காட்டிலும் சற்று முன்னதாகவே பருவழை தொடங்கி மாநிலத்தில் கனமழை பெய்ததுள்ளது.

சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. திடீரென்று பெய்த கனமழையில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 10 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹிமாசல பிரதேசத்தின் பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலாளர் ஒன்கர் சந்த் ஷர்மா கூறுகையில், "இதுவரை வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 303க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளன.

இந்த கனமழையால் அரசுக்கு ரூ.3 கோடி இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, 2 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 124 சாலைகள் சேதமடைந்துள்ளது.

மேலும், மண்டி - பண்டோ பகுதியில் ஏராளமான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளது. எனவே வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மண்டி-பராஷர் பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஹிமாசல் மாநிலத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு விடுக்கப்பட்ட மழை எச்சரிக்கை தொடரும்" என்று ஒன்கர் சந்த் ஷர்மா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.