முதல்வா் பதவியில் இருந்து கேஜரிவால் விலகக் கோரி காந்தி நினைவிடத்தில் பாஜகவினா் மௌன போராட்டம்
மதுபான ஊழல் வழக்கு விவகாரத்தில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பதவி விலக வலியுறுத்தி காந்தி சமாதி அமைந்துள்ள ராஜ்காட் பகுதியில் பாஜக தலைவா்கள் திங்கள்கிழமை மௌன விரதப் போராட்டம் மேற்கொண்டனா்.









