ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நீட் விலக்கு மசோதாவின் நிலை என்ன? குடியரசுத் தலைவர் பதில்

நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கக் கோரி மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய கடிதத்திற்கு குடியரசுத் தலைவர் மாளிகை பதிலளித்துள்ளது.

News image

திரெளபதி முர்மு

Updated On :14 மார்ச் 2023, 10:30 am

DIN

நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கக் கோரி மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய கடிதத்திற்கு குடியரசுத் தலைவர் மாளிகை பதிலளித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2022 பிப்ரவரி  8-ஆம் தேதி நீட் தோ்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி கடந்த மே மாதம் அனுப்பி வைத்தார்.

தொடர்ந்து மசோதா குறித்து மத்திய அமைச்சகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி 8 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து மசோதாவுக்கு ஒப்புதல் தரக் கோரி குடியரசு தலைவருக்கு கடந்த ஜனவரி மாதம் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக மசோதா அனுப்பப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தரப்பில் அவரது மாளிகையில் இருந்து பதிலளிக்கப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.