பாட்னாவில் பரவும் பன்றிக் காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா: மக்கள் அச்சம்!

பாட்னாவின் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பும், இரண்டு பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலும் பதிவாகியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
பாட்னாவில் பரவும் பன்றிக் காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா: மக்கள் அச்சம்!
Published on
Updated on
1 min read

பாட்னாவின் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பும், இரண்டு பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலும் பதிவாகியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

பாட்னாவில் சிவில் சர்ஜன் ஷரவன் குமார் கூறுகையில், 

சப்ஜிபாக் பகுதியைச் சேர்ந்த நான்கு வயதுக் குழந்தை மற்றும் சம்பட்சாக்கில் ஒருவருக்கு இன்ஃப்ளூயன்சா(எச்3என்2) பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களில் இரண்டு பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன. 

மேலும், பாட்னாவில் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் பல்வேறு தடுப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 20 படுக்கைகளும், பாட்னா எய்ம்ஸில் 30 படுக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

மேலும், நாலந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சதர் மருத்துவமனை ஆகியவற்றில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் பரிசோதனை செய்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டுள்ளோம் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com