எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கேரளம்: சட்டைப் பையில் பற்றி எரிந்த கைப்பேசி!

கேரளத்தின் திரிச்சூர் மாவட்டத்தில் வயதான ஒருவரின் சட்டைப் பையில் வைத்திருந்த கைப்பேசி வெடித்து தீப்பிடித்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :18 மே 2023, 2:57 pm

கேரளத்தின் திரிச்சூர் மாவட்டத்தில் வயதான ஒருவரின் சட்டைப் பையில் வைத்திருந்த கைப்பேசி வெடித்து தீப்பிடித்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டதால் அந்த நபர் நல்வாய்ப்பாக தீக்காயங்கள் ஏதுமின்றி தப்பினார்.

கேரளத்தில் இதுபோன்று கைப்பேசி வெடித்து விபத்து ஏற்படுவது இந்த மாதத்தில் இது மூன்றாவது முறையாகும். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அந்த வயதான நபர் டீக்கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரது சட்டைப் பையில் இருந்த கைப்பேசி திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது. 

இணையத்தில் வைரலாகி வரும் அந்த விடியோவில் பதிவாகியிருப்பதாவது: ஒரு வயதான முதியவர் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருக்கிறார். திடீரென அவரது சட்டைப் பையில் வைத்திருந்த கைப்பேசி வெடித்து பற்றி எரிகிறது. துரிதமாக செயல்பட்ட அந்த முதியவர் சட்டைப் பையில் இருந்து கைப்பேசியை எடுத்துக் கீழே போடுகிறார். அந்தக் கடையில் உள்ள மற்றொரு நபர் அந்த கைப்பேசியின் மீது தண்ணீரை ஊற்றி அணைப்பதாக பதிவாகியுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த காவல் துறை தரப்பில் கூறியதாவது: அந்த முதியவர் தீப்பற்றி எரிந்த அந்த கைப்பேசியை ஓராண்டுக்கு முன்பாக 1000 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். அவரது கைப்பேசி தீப்பற்றி எரிவதற்கு முன்பு வரை எந்தவித பிரச்னையுமின்றி நன்றாக வேலை செய்துள்ளது. இருப்பினும், திடீரென தீப்பற்றியதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை என்றனர்.

இதேபோல கடந்த வாரத்தில், கேரளத்தில் கால்சட்டை பையில் வைத்திருந்த கைப்பேசி வெடித்து ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி 8 வயது சிறுமி கைப்பேசி வெடித்து கேரளத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.