அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பாரம்பரியம், கலாசாரத்தை காங்கிரஸ் ஏன் இந்த அளவுக்கு வெறுக்கிறது? அமித் ஷா

இந்திய பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் காங்கிரஸ் கட்சி ஏன் இந்த அளவுக்கு வெறுக்கிறது? என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

News image
Updated On :26 மே 2023, 11:19 am

DIN


இந்திய பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் காங்கிரஸ் கட்சி ஏன் இந்த அளவுக்கு வெறுக்கிறது? என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது என்று காங்கிரஸ் கூறியிருந்தது குறித்து பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் அவ்வாறு கூறுவதன் மூலம் திருவாவடுதுறை ஆதீனத்தின் வரலாற்றை நிராகரிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் அமித் ஷா இது தொடர்பாக பதிவிட்டிருப்பதாவது, இந்தியா சுதந்திரம் பெற்றதைக் குறிக்கும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த புனிதமான சைவ மடம் சார்பில் நேருவுக்கு செங்கோல் வழங்கப்பட்டது. ஆனால், அதனை ஒரு வாக்கிங் ஸ்டிக் என்று அருங்காட்சியகத்துக்கு காங்கிரஸ் கொடுத்துவிட்டது என்றும் கடுமையாக விமரிசித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் கட்சி தனது செயல்பாடு குறித்து சிந்திக்க வேண்டும். நாட்டின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் காங்கிரஸ் கட்சி ஏன் இந்த அளவுக்கு வெறுக்கிறது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.