முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஏழை, எளிய மக்களின் குரலாக செங்கோல் ஒலிக்கும்: மோடி

புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோல் ஏழைம், எளிய மக்களின் குரலாக ஒலிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :28 மே 2023, 7:58 am

DIN

புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோல் ஏழைம், எளிய மக்களின் குரலாக ஒலிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

புதிய நாடாளுமன்ற கட்டடடத்தை திறந்துவைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  புதிய நாடாளுமன்ற வளாகம் இந்தியர்கள் அனைவருக்குமானது, அனைத்து இந்தியர்களுக்கும் பெருமிதம் அளிக்கக்கூடியது.

புனிதமான செங்கோலின் பெருமையை மீட்டெடுக்க முடிந்தது நமது அதிருஷ்டம். இதற்காக பல தடைகளைத் தாண்டி வந்துள்ளோம்.  

தமிழ்நாட்டு ஆதீனங்களில் ஆசியுடன் நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களின் குரலாக செங்கோல் ஒலிக்கும். 

செங்கோல் புனிதமானது, முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாட்டின் செங்கோல் நம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கம் அளிக்கும். ராஜாஜி மற்றும் ஆதீனத்தின் பங்களிப்பில் செங்கோல் உருவாக்கப்பட்டது.

புதிய நாடாளுமன்றம் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டுள்ளது. இந்த பொற்காலத்தில் நுழைவதற்குள் பல தடைகளைத் தாண்டி வந்துள்ளோம் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.