மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பொதுக்கூட்டம், பேரணியில் பங்கேற்க சந்திரபாபு நாயுடுவுக்கு அனுமதி!

பொதுக் கூட்டங்கள், பேரணிகளில் பங்கேற்க தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

News image
சந்திரபாபு நாயுடு
Updated On :28 நவம்பர் 2023, 12:26 pm

DIN

பொதுக் கூட்டங்கள், பேரணிகளில் பங்கேற்க தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கு ஊழல் நடைபெற்றதாக முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடுக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மாநில ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரை கடந்த செப்டம்பா் மாதம் கைது செய்தனா். ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அவா் அடைக்கப்பட்டிருந்தாா்.

சந்திரபாபு நாயுடுக்கு கண்புரை அறுவை சிகிச்சை அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி, அவருக்கு 4 வார கால இடைக்கால ஜாமீனை ஆந்திர உயா்நீதிமன்றம் வழங்கியிருந்தது. இந்நிலையில், அதை நிரந்தர ஜாமீனாக நீதிமன்றம் மாற்றியுள்ளது.

இதையடுத்து,  சந்திரபாபு நாயுடுக்கு உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு மனு தாக்கல் செய்துள்ளது. 

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு தொடர்பாக பதிலளிக்க சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

மேலும், பொதுக் கூட்டங்கள், பேரணிகளில் பங்கேற்க சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், நிலுவையில் உள்ள வழக்கு குறித்து அவர் பொதுவில் கருத்துகளை தெரிவிக்கவோ அல்லது ஊடகங்களில் பேசவோ கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.