அசாமில் பயணிகள் ரயில் மோதியதில் யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம், பிஸ்வநாத் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக யானைகள் வலம் வந்த வண்ணம் உள்ளது. நேற்றிரவு பெஹாலிக்கு அருகே புரோய்காட் பகுதியில் உள்ள தண்டவாளத்தை காட்டு யானைக் கூட்டம் ஒன்று கடக்க முயன்றுள்ளது.
அப்போது அந்த வழியாக சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் திடீரென யானை ஒன்றின் மீது மோதியது. இதில் யானை ஒன்று நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. சம்பவத்தை தொடர்ந்து உள்ளூர் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
உயிரிழந்த யானைக்கு இன்று உடற்கூராய்வு நடைபெறுகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக மேற்கு வங்கத்தில் நேற்று சரக்கு ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


