தன்பாத்: ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் துப்பாக்கி சூடு

தில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் பரிசோதகரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பயணி ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

தில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் பரிசோதகரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பயணி ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
இதுகுறித்து கிழக்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், தன்பாத்தில் சீல்டா - புது தில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் பி-8 பெட்டியில் ஏறிய ஹர்விந்தர் சிங்(41) டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் துப்பாக்கியால் சுட்டார். ரயில்வே பாதுகாப்புப் படை உடனடியாக அந்த நபரைக் கைது செய்தது. 
தொடர்ந்து, கோடெர்மா நிலையத்தில் ரயிலில் இருந்து இறக்கி மாநில காவல்துறையிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். எனவே, அனைத்து பயணிகளும் சரியான டிக்கெட்டுடன் மட்டுமே எந்த ரயிலிலும் ஏற வேண்டும். இருப்பினும், இந்த சம்பவத்தில் காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஹவுரா - புது தில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸுக்கு டிக்கெட் எடுத்த ஹர்விந்தர் சிங், தன்பாத்தில் சீல்டா - புது தில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸில் ஏறினார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே கைதான ஹர்விந்தர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com