தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

வாரிசு அரசியலிலிருந்து தெலங்கானாவை விடுவிக்க பாஜகவால் மட்டுமே முடியும்: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

வாரிசு அரசியல், ஊழலில் இருந்து தெலங்கானாவை விடுவிக்க பாஜகவால் மட்டுமே முடியும் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :14 அக்டோபர் 2023, 7:53 pm IST

வாரிசு அரசியல், ஊழலில் இருந்து தெலங்கானாவை விடுவிக்க பாஜகவால் மட்டுமே முடியும் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் உள்ள பாஜகவின் தலைமையகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தெலங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட பிறகு கே சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசுக்கு மக்கள் வாய்ப்பளித்தனர். ஆனால் அவர்கள் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டனர். அவர்கள் மாநிலத்தை கொள்ளையடித்துள்ளனர். தெலங்கானாவுக்கு எதுவும் செய்யவில்லை. 
மாநிலத்தில் அனைத்து உள்கட்டமைப்பு திட்டங்களையும் பிரதமர் மோடி செய்துள்ளார். தெலங்கானா மக்கள் காங்கிரஸின் வாரிசு அரசியலை விரும்பவில்லை. பிஆர்எஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவதையும் அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் தெலங்கானாவில் மாற்றத்தை விரும்புகிறார்கள். 1997 முதல் தெலங்கானா கோரிக்கையை ஆதரித்து வரும் ஒரே கட்சி பாஜக மட்டுமே. எனவே, மாற்றத்தின் முகவராக நாங்கள் இருக்கிறோம். 
தெலங்கானாவை வாரிசு அரசியல் மற்றும் ஊழலில் இருந்து என்றென்றும் விடுவித்து, மாநிலத்தில் வளர்ச்சி மற்றும் செழிப்பை ஏற்படுத்தக்கூடிய கட்சி பாஜக. இவ்வாறு அவர் கூறினார். தெலங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 30-ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.