தொழிலதிபர் ரத்தன் டாடா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிற்கோ அல்லது எந்த கிரிக்கெட் வீரருக்கோ பரிசளிப்பதாக தான் எந்தவொரு அறிவிப்பும் செய்யவில்லை என்று தொழிலதிபர் ரத்தன் டாடா கூறியுள்ளார்.
இதுகுறித்து ரத்தன் டாடா அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் வெகுமதி வழங்குவது பற்றி ஐசிசி அல்லது பிற கிரிக்கெட் கவுன்சிலிடம் நான் கூறவில்லை. கிரிக்கெட்டுடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. எனது அதிகாரப்பூர்வ தளங்களை தவிர்த்து வரும் வாட்சப் ஃபார்வர்டுகள் மற்றும் விடியோக்களை நம்பவேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ரயில் விபத்து நடத்த இடத்தைப் பார்வையிடுகிறார் ஆந்திர முதல்வர்!
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கானுக்கு ரத்தன் டாடா ரூ.10 கோடி பரிசுத்தொகை அறிவித்ததாக போலியான வாட்சப் ஃபார்வர்டுகளும், விடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து ரத்தன் டாடா இந்தப் பதிவினை பதிவிட்டுள்ளார்.
திங்கள்கிழமை ஆப்கானிஸ்தான் உலகக்கோப்பை போட்டியில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. மேலும் 50 ஓவர் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐடிஐ, டிப்ளமோ, சிஏ முடித்தவர்களுக்கு வேலை: எங்கு?

சபலென்கா, ஸ்வியாடெக், எலா வெற்றி

வி.சி.க.வின் எக்ஸ் பக்கம் முடக்கம்!

ஃபின் ஆலன் அபாரம்: கொல்கத்தாவுக்கு 4-ஆவது வெற்றி
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

