காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ம.பி.: பழங்குடியினர் விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட 80 மாணவர்கள் பாதிப்பு!

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏக்லவ்யா பழங்குடியினர் விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட 80 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

News image
கோப்புப்படம்
Updated On :19 செப்டம்பர் 2023, 7:21 am

DIN

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏக்லவ்யா பழங்குடியினர் விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட 80 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஞாயிற்றுக்கிழமை இரவு உணவை சாப்பிட்ட பிறகு, விடுதியில் உள்ள மாணவர்களுக்கு திடீரென வயிற்று வலி, வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. சிலர் விக்டோரியா மருத்துவமனையிலும், சிலர் தனியார் மருத்துவமனைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். 

மாணவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் உணவு விஷமானதாக கூறியுள்ளார். 

ஜபல்பூர் மாவட்ட நிர்வாகம், மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. 

சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் அதிகாரிகள் குழு விடுதிக்கு விரைந்தனர். விடுதியை ஆய்வு செய்த எஸ்டிஎம் பங்கஜ் மிஸ்ரா, மாணவர்களின் உயிருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை, முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் குணமடைந்து வருகின்றனர். 

விடுதியில் ஆய்வு செய்து மாணவர்கள் சாப்பிட்ட உணவின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.