கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இந்தியா கூட்டணியில் இணைவது உறுதி: அரவிந்த் கேஜரிவால்

விரைவில்  இந்தியா கூட்டணியில் இணையவுள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கேஜரிவால்

Published On :

விரைவில்  இந்தியா கூட்டணியில் இணையவுள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை, இந்தியா கூட்டணிக்கு ஆம்ஆத்மி கட்சி ஆதரவளிக்கவுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இணைவது உறுதியாகியுள்ளது. இக்கூட்டணியில் இருந்து தனது கட்சி எப்போதும் விலகாது. கூட்டணியின் கொள்கையை நிறைவேற்ற உறுதியாக உள்ளதாக மேலும் கேஜரிவால் தெரிவித்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுக்பால் சிங் கைரா கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதாக பஞ்சாப் காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்த நிலையில், கூட்டணி குறித்து அரவிந்த் கேஜரிவால் கூறியிருப்பது முக்கியவத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தொகுதி பங்கீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த கேஜரிவால், சில நாள்களில் தொகுதிப் பங்கீடு தொடர்பான கொள்கைமுடிவு தயாராகி விடும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை ஏன் இன்னும் முன்னிறுத்தவில்லை என்ற கேள்விக்கு, "எங்கள் நோக்கம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம் அளிப்பது மற்றும் இந்த நாட்டில் உள்ள 140 கோடி மக்கள் அனைவரும் தாங்கள் பிரதமராக இருப்பதைப் போல உணரும் அமைப்பை உருவாக்குவது.

மக்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். எந்தவொரு தனிநபருக்கும் அதிகாரம் அளிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை" எனத் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.