திரிபுராவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல்: பணிகள் தீவிரம்!

திரிபுராவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 
திரிபுராவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல்: பணிகள் தீவிரம்!

திரிபுராவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

திரிபுரா சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் ஓய்ந்தது. மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக நாளை (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

திரிபுரா பேரவைத் தோ்தலில் 20 பெண்கள் உள்பட மொத்தம் 259 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவா்களின் வெற்றி-தோல்வியை, 28.13 லட்சம் வாக்காளா்கள் தீா்மானிக்கவுள்ளனா்.

மாநிலம் முழுவதும் 3,328 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன; இதில், 1,100 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வங்கதேசத்துடனான எல்லைப் பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நாளை தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவி பேட் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு தயாராக வைக்கப்படுகின்றன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தலுக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தோ்தலில் பதிவாகும் வாக்குகள், மாா்ச் 2-இல் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com