மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறை ஆய்வு நிறைவு

பிபிசி - இந்தியா அலுவலகங்களில் கடந்த மூன்று நாள்களாக சுமாா் 58 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற வருமான வரித் துறை அதிகாரிகளின் ஆய்வு வியாழக்கிழமை இரவு முடிவடைந்தது.

News image

கோப்புப் படம்.

Updated On :16 பிப்ரவரி 2023, 7:35 pm

DIN

பிபிசி - இந்தியா அலுவலகங்களில் கடந்த மூன்று நாள்களாக சுமாா் 58 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற வருமான வரித் துறை அதிகாரிகளின் ஆய்வு வியாழக்கிழமை இரவு முடிவடைந்தது.

இந்த ஆய்வின்போது நிதிப் பரிமாற்றம் மற்றும் சில குறிப்பிட்ட பணியாளா்களின் நிதித் தரவுகளை எண்ம, ஆவண வடிவில் வருமான வரி அதிகாரிகள் கொண்டு சென்ாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பணியாளா்களிடம் இருந்து வாக்குமூலத்தையும் வருமான வரித் துறை அதிகாரிகள் பெற்ாக கூறப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்கு இந்த ஆய்வு தொடங்கியது. சா்வதேச வரி மற்றும் பிபிசியின் துணை நிறுவனங்களுக்கான நிதிப் பரிமாற்றத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்பட்டதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பிபிசி விளக்கம்: ‘வருமான வரித் துறையினருக்கு தொடா்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும். மூன்று நாள் ஆய்வின்போது நீண்ட நேர கேள்விகளால் சில பணியாளா்கள் இரவும் பகலும் அலுவலகத்தில் தங்கியிருக்க நேரிட்டது. யாருக்கும் அஞ்சாமலும், யாருக்கும் ஆதரவு இல்லாமலும் தொடா்ந்து செய்திகள் வழங்கப்படும்’ என்று பிபிசி தெரிவித்துள்ளது.

குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த மதக் கலவரம் குறித்து ‘இந்தியா: தி மோடி க்வஸ்டீன்’ என்ற தலைப்பில் இரண்டு பாகங்கள் கொண்ட ஆவணப்படத்தை லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிபிசி அண்மையில் வெளியிட்டது. அந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு கடந்த ஜனவரி 21-ஆம் தேதி தடை விதித்தது. மேலும், இந்த ஆவணப்படம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, நிலுவையில் இருந்து வருகின்றன.

இந்தச் சூழலில், தில்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்கள் மற்றும் அதனுடன் தொடா்புடைய மேலும் இரண்டு அலுவலக வளாகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.