மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பிப்ரவரி 23 ஆம் தேதி கர்நாடகம் மீண்டும் செல்கிறார்.
கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்குவதால், மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் முன்னணி தலைவருமான அமித் ஷா, அண்மைக்காலமாக கா்நாடகத்திற்கு அடிக்கடி வந்துகொண்டிருக்கிறாா். கடந்த 11ஆம் தேதி தக்ஷின கன்னடா மாவட்டத்துக்குச் சென்ற அவர், அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பிப்ரவரி 23 ஆம் தேதி கர்நாடக மாநிலம் மீண்டும் செல்கிறார்.
பெங்களூரு மற்றும் பல்லாரியில் நடைபெறும் இரண்டு முக்கிய பொது நிகழ்ச்சிகளில் அமித் ஷா பங்கேற்பார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்க, கட்சித் தலைவர்களுடன் அவர் ஒரு சந்திப்பையும் நடத்துவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க- ஈஷாவில் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு
இந்த நிலையில் அமித் ஷா கர்நாடகம் வருகை தொடர்பாக அம்மாநில போக்குவரத்து மற்றும் எஸ்டி நலத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு இன்று பல்லாரி மற்றும் சந்தூரில் கட்சி தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். மத்திய அமைச்சர் அமித் ஷா, 12 நாட்களில் கர்நாடகத்துக்கு வருகை தரவிருப்பது இது இரண்டாவது முறையாகும்.