ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் சிவசேனை கட்சியின் எம்பி சஞ்சய் ரெளத் இணைந்துள்ளார்.
நாட்டில் ஒற்றுமையை வலியுறுத்தியும், மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரான ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நடைபயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, ஹரியாணா, ஹிமாச்சல், தில்லி உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து தற்போது ஜம்மு காஷ்மீரை அடைந்துள்ளது.
இந்த நடைபயணத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் இன்று நடைபெற்ற நடைபயணத்தில் சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரெளத் கலந்து கொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...





