மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வழக்குகள் ஒத்திவைப்பு.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை

தேவையில்லாமல், வழக்குகளை ஒத்திவைக்குமாறு வழக்குரைஞர்கள் கோர வேண்டாம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வலியுறுத்தியுள்ளார்.

News image
Updated On :3 நவம்பர் 2023, 12:28 pm

DIN


புது தில்லி: தேவையில்லாமல், வழக்குகளை ஒத்திவைக்குமாறு வழக்குரைஞர்கள் கோர வேண்டாம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வலியுறுத்தியுள்ளார்.

தேதிக்கு மேல் தேதி கொடுக்கும் நீதிமன்றமாக உச்ச நீதிமன்றம் மாறுவது வேண்டாம் என்றும் சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் ஒத்திவைப்பது தொடர்பான புள்ளிவிவரத்தைப் பார்த்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இவ்வாறு கூறினார்.

இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் தொடங்கியதும், சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு, கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் உச்ச நீதிமன்றத்தில் எத்தனை வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன என்ற புள்ளிவிவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதனைப் பார்த்த தலைமை நீதிபதி சந்திரசூட், தேதிக்கு மேல் தேதி கொடுக்கும் நீதிமன்றமாக உச்ச நீதிமன்றம் மாறுவதை விரும்பவில்லை. வழக்குரைஞர்கள் மிகவும் அவசியமெனில் மட்டுமே வழக்கை ஒத்திவைக்கக் கோர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மக்களின் நம்பிக்கையை இழக்கும் வகையில் செயல்படுவது நமது நாட்டின் உச்ச நீதிமன்றத்துக்கு நல்லதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் மட்டும் உச்ச நீதிமன்றத்தில் 3,688 ஒத்திவைப்பு ரசீதுகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இன்று ஒரே நாளில் 175 ஒத்திவைப்பு ரசீதுகள் அளிக்கப்பட்டுள்ளதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

அனைத்து பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கும் நான் வேண்டி கேட்டுக்கொள்வது, அவசியமின்றி வழக்கு விசாரணைகளை ஒத்திவைக்குமாறு கோர வேண்டாம் என்பதே என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.