இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மிகப் பெரிய தலைவராகிவிட்டார் கேஜரிவால்: ஃபரூக் அப்துல்லா

கேஜரிவால் சிறைக்கு சென்றதால் ஆம் ஆத்மியின் பலம் அதிகரித்துள்ளதாக ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

News image
ஃபரூக் அப்துல்லா(கோப்புப்படம்)- ANI
Updated On :2 ஏப்ரல் 2024, 7:36 am

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சிறைக்கு சென்ற பிறகு மிகப்பெரிய தலைவராக உருவெடுத்துள்ளதாக ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

தில்லி கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஃபரூக் அப்துல்லா கூறியதாவது:

“சிறைக்கு சென்ற பிறகு அவரது அந்தஸ்து மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மிகப்பெரிய தலைவராக உருவெடுத்துள்ளார். இது ஆம் ஆத்மிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். பஞ்சாபில் 13 மக்களவை தொகுதிகளையும், தில்லியில் 7 மக்களவைத் தொகுதிகளையும் ஆம் ஆத்மி கைப்பற்றும். அதுமட்டுமின்றி, ஹரியாணா மற்றும் ஹிமாசலிலும் அவரின் கைது பிரதிபலிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கச்சத்தீவு பிரச்னை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “வங்கதேசத்துக்கு நமது நிலத்தை பிரதமர் அளித்துள்ளார். லடாக்கில் உள்ள இந்திய பகுதிகளை சீனா கைப்பற்றியுள்ளது. அருணாசல் மாநில பகுதிகளுக்கு நேற்று சீனா பெயர் வைத்துள்ளது. இதைப் பற்றியெல்லாம் பாஜக எதுவும் பதிலளிக்கவில்லை. ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒருவரை பார்த்து ஒரு விரலை நீட்டினால், 3 விரல்கள் உங்களை நோக்கி இருக்கும்.” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.