மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிறையில் முதல் நாள்: உறக்கமின்றி தவித்த கேஜரிவால்!

கேஜரிவால் முதல் நாள் நேற்றிரவு வெகுநேரம் உறக்கமின்றி இருந்ததாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News image
திகார் சிறையில் கேஜரிவால்
Updated On :2 ஏப்ரல் 2024, 7:53 am

DIN

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கேஜரிவால் முதல் நாள் நேற்றிரவு வெகுநேரம் உறக்கமின்றி இருந்ததாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நகர நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து கேஜரிவால் திகாா் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிறை எண் 2-இல் அடைக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, அவா் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கேஜரிவாலுக்கு வழங்கப்படும் சலுகைகள்

பொதுவாக திகார் சிறையில் உள்ள கைதிகளுக்கு தினசரி 2 வேளை பருப்பு சாம்பார், சப்ஜி மற்றும் 5 ரொட்டிகள் அல்லது அரிசி சாதம் வழங்கப்படும். இதுதவிர காலை மற்றும் மாலை என இருவேளைகளில் ஒரு கோப்பை தேநீர் வழங்கப்படும்.

முதல்வர் கேஜரிவால் நீரிழிவு நோயாளியாக உள்ளதால் அவருக்கு வீட்டில் தயாரித்த உணவுகள், பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும், ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென குறைந்தால் சாப்பிடுவதற்கு உயர்தர சாக்லேட் ஆகியவையும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

திகார் சிறையில் இருக்கும் அடுத்த 14 நாள்களும் அவருக்கு படுக்கை விரிப்பு, தலையணை் ஆகியவை வழங்கப்படும். அவரது உடல்நிலையைக் கண்காணிக்கத் தேவையான மருத்துவ உபகரணங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர படிப்பதற்கு பகவத் கீதை, ராமாயணம் மற்றும் பிரதமர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்? ஆகிய புத்தகங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் அவர் அணிந்திருக்கும் மத லாக்கெட்டையும் அணிய அவருக்கு அனுமதி அளித்துள்ளது. இதைத்தவிர சிறையில் தொலைக்காட்சி பார்க்கும் வசதியும் உண்டு. அதில் அரசு தொடர்பான முக்கிய சேனல்களை பார்க்க முடியும்.

சிறை அதிகாரிகள் சிசிடிவி கேமராக்கள் மூலம் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவரது அறைக்கு வெளியே அவசர குழுவும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திகார் சிறையில் முதல் நாள் இரவை கழித்த கேஜரிவால் வெகுநேரம் உறக்கமின்றி இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவப் பரிசோதனையில் அவரது சர்க்கரை அளவு 50-க்கும் கீழ் குறைந்ததால் மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் அவருக்கு மருந்துகள் வழங்கப்பட்டன.

கேஜரிவாலை சந்திக்கும் ஆறு நபர்கள்

இந்தக் காலகட்டத்தில் தான் சந்திக்க விரும்பும் 6 பேரின் பட்டியலை கேஜரிவால் அளித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் அவரது மனைவி சுனிதா கேஜரிவால், அவர்களது மகன், மகள், அவரது தனிச் செயலாளர் பிபவ் குமார், ஆம் ஆத்மி கட்சியின் பொதுச் செயலாளர் சந்தீப் பதக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதே வழக்கில், கடந்தாண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவா் சஞ்சய் சிங், தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, பிஆா்எஸ் தலைவா் கே.கவிதா ஆகியோரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.