வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.
2019 மக்களவைத் தொகுதியில் வயநாட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இந்த முறை மீண்டும் வயநாட்டில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், புதன்கிழமை காலை கேரளம் வரும் ராகுல் காந்தி பகல் 12 மணியளவில் சாலையில் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.
அதன்பிறகு, கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியவுடன் நாளையே தில்லி திரும்புகிறார்.
வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து பாஜக மாநில தலைவர் சுரேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ராஜாவின் மனைவியும், கட்சியின் மூத்த தலைவருமான ஆனி ராஜா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
ராகுலின் வருகையை விமர்சித்துள்ள சுரேந்திரன், “கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக்காக ராகுல் காந்தி எதுவும் செய்யவில்லை. இறுதியாக வேட்புமனு தாக்கல் செய்ய வருவதில் மகிழ்ச்சி.” எனத் தெரிவித்துள்ளார்.