பணமோசடி வழக்குகள் தொடர்பாக பாஜக தலைவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை வெளியிடுமாறு அமலாக்கத்துறைக்கு தில்லி அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவர் அதிஷி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி என்னுடைய செய்தியாளா் சந்திப்பை அடிப்படையாகக் கொண்டு, பாஜக அளித்த புகாரின் அடிப்படையில், தோ்தல் ஆணையம் எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களுடன் பேசிய அதிஷி, தேர்தல் ஆணையம் பாஜக உத்தரவின் பேரில் செயல்படுகிறது.
வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களான சஞ்சய் சிங், மணீஷ் சிசோடியா, கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரை அமலாக்கத்துறை கைது செய்தது. அவர்களுக்கு எதிரான குற்றங்கள் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
பணமோசடி வழக்குகளில் பாஜக தலைவர்கள் மீது அமலாக்கத்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சிகளைக் குறிவைக்க மற்ற மத்திய அமைப்புகளைப் போலவே பாஜகவும் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்துகிறது.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களைக் குறிவைத்து அவர்களைக் கைது செய்ய சிபிஐ, இடி, தற்போது தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது.
மத்திய அமைப்புகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வதை விட்டுவிட்டு தேர்தலில் ஆம் ஆத்மியை எதிர்த்துப் போராட வேண்டும் என்று பாஜகவிடம் நான் சொல்ல விரும்புகிறேன், என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேரவைத் தோ்தல்கள்! 11,000 சமூக ஊடக பதிவுகள் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை!

வாக்காளரின் பொறுப்பும், கடமையும்...

ராகவ் சத்தாவை நீக்குவது உள்கட்சி விவகாரம், ஆனால் அவா் பேசுவதை தடுப்பது தவறு: பாஜக

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களின் இடை நீக்கத்தை ரத்து செய்யாவிடில் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்கமாட்டோம்: அதிஷி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


