ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேரள பாடப்புத்தக விவகாரம்: கல்வி அமைச்சர் காவல்துறையில் புகார்!

கேரள கல்வி அமைச்சர் காவல்துறையில் புகார்

News image
வி.சிவன்குட்டி
Updated On :11 ஏப்ரல் 2024, 4:07 pm

DIN

கேரள மாநில கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி மாநில தலைமை காவல் அதிகாரியிடம் ‘மிஸ்டர் சின்ஹா’ என்கிற பெயரில் உள்ள சமூல வலைத்தள கணக்கின் மீது நடவடிக்கை எடுக்குமாறு வியாழக்கிழமை புகார் அளித்துள்ளார்.

‘மிஸ்டர் சின்ஹா’ என்கிற எக்ஸ் பக்கத்தில் கேரளாவில் மாணவர்களுக்கு இவைதான் சொல்லிக் கொடுக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்ட பதிவில் புத்தகத்தின் பக்கம் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.

ஹிந்து மதத்தினரை இழிவுபடுத்தும் வகையில் அந்த பக்கத்தில் சில காட்சிகளும் தகவல்களும் உள்ளன. இந்த விவகாரத்தில் தொடர்புடைய சமூக வலைத்தள பக்கம் குறித்து அமைச்சர் புகார் அளித்துள்ளார்.

அமைச்சர் பகிர்ந்த படம்

அமைச்சர் பகிர்ந்த படம்

சிவன்குட்டி தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த புத்தகம் கேரள அரசின் கல்வித் துறை பதிப்பித்தது இல்லை. இது அரசின் மீதான பகைமை தூண்டும் இன்னொரு முயற்சி. கேரளத்தில் உள்ள தோழமையையும் ஒற்றுமையையும் எங்களுடன் இருப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். வெறுப்புக்கு இங்கு இடமில்லை- அதனாலேயே வகுப்புவாதத்தால் இங்கு காலூன்ற முடியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவு நீக்கப்படவும் அதனை பகிர்ந்தவர் மீது முறையான நடவடிக்கை எடுக்கவும் சிவன்குட்டி வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.