நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பஞ்சாபில் காங்கிரஸ் எம்எல்ஏ மீது மர்ம நபர்கள் தாக்குதல்

பஞ்சாபில் காரில் சென்றுகொண்டிருந்த காங்கிரஸ் எம்எல்ஏ மீது மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

விவேக் சர்மா.

Updated On :16 ஆகஸ்ட் 2024, 1:34 pm

DIN

பஞ்சாபில் காரில் சென்றுகொண்டிருந்த காங்கிரஸ் எம்எல்ஏ மீது மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிமாசல் மாநிலம், குட்லேஹர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ விவேக் சர்மா. இவர் ஜலந்தரில் இருந்து காரில் தனது சொந்த கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரது காரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். மேலும் காரின் பின்புற கண்ணாடியையும் அவர்கள் உடைத்துள்ளனர்.

இதையடுத்து எம்.எல்.ஏ.வின் கார் ஓட்டுநர் இருவரையும் சிறிது தூரம் துரத்திச் சென்றிருக்கிறார். இருப்பினும் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு காணப்பட்டது.

பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம்ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.