ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டம்: கார்கே, ராகுல் பங்கேற்பு!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரு நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளனர்.
ஜம்மு -காஷ்மீருக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு கூட்டணி குறித்து முடிவு செய்ய சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஃபரூக் அப்துல்லாவின் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கும் என்றும் பேசப்படுகிறது.
இதையடுத்து, ஸ்ரீநகரில் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் மற்றும் ஜம்மு- காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்கள் பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
ஜம்மு -காஷ்மீருக்கு வருகிற செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.