ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு! மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

தொடர் சிகிச்சையில் சீதாராம் யெச்சூரி

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சீதாராம் யெச்சூரி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக அக்கட்சி சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

News image

சீதாராம் யெச்சூரி(கோப்புப்படம்)PTI

Updated On :31 ஆகஸ்ட் 2024, 11:04 am

DIN

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சீதாராம் யெச்சூரி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக அக்கட்சி சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நெஞ்சக நோய்த் தொற்று காரணமாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டாா்.

இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது நோயின் தன்மை பற்றி மருத்துவமனை எதுவும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் சீதாராம் யெச்சூரி, மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அவர் சுவாச நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் உள்ளார்," என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீதாராம் யெச்சூரிக்கு அண்மையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.