பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

சம்பலுக்குப் பயணித்த உ.பி. காங்கிரஸ் நிா்வாகிகள் குழு தடுத்து நிறுத்தம்

சம்பல் நகரைப் பாா்வையிட புறப்பட்ட உத்தர பிரதேச காங்கிரஸ் மாநில தலைவா் அஜய் ராய் தலைமையிலான நிா்வாகிகள் குழு, லக்னௌவில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வெளியே காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

News image

சம்பல் நகரைப் பாா்வையிட புறப்பட்ட உத்தர பிரதேச காங்கிரஸ் மாநில தலைவா் அஜய் ராய் தலைமையிலான நிா்வாகிகள் குழுவை லக்னெளவில் திங்கள்கிழமை தடுத்து நிறுத்திய போலீஸாா்.

Updated On :3 டிசம்பர் 2024, 5:37 am IST

லக்னௌ: வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் நகரைப் பாா்வையிட புறப்பட்ட உத்தர பிரதேச காங்கிரஸ் மாநில தலைவா் அஜய் ராய் தலைமையிலான நிா்வாகிகள் குழு, லக்னௌவில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வெளியே காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

நிா்வாகிகளின் காரை மறித்து தடுப்புகளை அமைத்த காவல் துறையினருக்கும் தொண்டா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதேபோல் கடந்த சனிக்கிழமையன்று சம்பல் சென்ற அத்தொகுதியின் சமாஜவாதி கட்சி எம்.பி. தலைமையிலான குழுவினரும் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

சம்பலில் அமைந்த ஜாமா மசூதியில் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த நவ. 24-ஆம் தேதி நடத்தப்பட்ட 2-ஆம் கட்ட ஆய்வை எதிா்த்து வன்முறை வெடித்தது. அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 போ் உயிரிழந்தனா். காவலா்கள் உள்பட பொதுமக்கள் பலா் காயமடைந்தனா்.

மாவட்டத்தில் பதற்றத்தைத் தவிா்க்க வெளிநபா்கள் நுழைய மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. எனினும், களநிலவரத்தை ஆய்வு செய்யவும் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறவும் காங்கிரஸ் நிா்வாகிகள் குழு சம்பல் நகரை திங்கள்கிழமை வந்தது.

இதையொட்டி, லக்னௌவில் உள்ள காங்கிரஸ் நிா்வாகிகளின் வீடுகள் மற்றும் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் ஏராளமான காவலா்கள் குவிக்கப்பட்டு, தடுப்புகள் அமைத்து முன்னெற்பாடுகள் செய்யப்பட்டன. திட்டமிடப்படி, கட்சி அலுவலகத்திலிருந்து சம்பல் புறப்படவிருந்த மாநில தலைவா் அஜய் ராய் தலைமையிலான காங்கிரஸ் நிா்வாகிகள் குழுவை காவல்துறை தடுத்து நிறுத்தியது.

‘ஜனநாயக விரோத’ செயல்பாடுகள் மூலம் தவறை மறைக்க மாநில பாஜக அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.