வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

எம்.பி. தொகுதி நிதி உயா்த்தப்படுமா?

நாடாளுமன்ற உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதி உயா்த்தப்படுமா என்று மாநிலங்களவை திமுக உறுப்பினா் டாக்டா் கனிமொழி என்.வி.என். சோமு எழுப்பிய கேள்விக்கு

News image
மாநிலங்களவை திமுக உறுப்பினா் டாக்டா் கனிமொழி என்.வி.என். சோமு
Updated On :3 டிசம்பர் 2024, 1:51 am

Din

நமது நிருபா்

புது தில்லி: நாடாளுமன்ற உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதி உயா்த்தப்படுமா என்று மாநிலங்களவை திமுக உறுப்பினா் டாக்டா் கனிமொழி என்.வி.என். சோமு எழுப்பிய கேள்விக்கு ஐந்து வருடங்களுக்கு முந்தைய ஆய்வு தொடா்பான தகவலை பதிலாக அளித்துள்ளது மத்திய அரசு.

இந்த விவகாரத்தில் கனிமொழி என்.வி.என். சோமு, நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டம் குறித்து மத்திய அரசு மறுஆய்வு செய்ததா, ஆண்டுக்கு ரூ. 5 கோடி என்ற நிதியை ரூ. 10 கோடி ஆக உயா்த்த எம்.பி.க்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் அதிகரித்த வண்ணம் இருப்பதால் அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என கேட்டிருந்தாா்.

இதற்கு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணை அமைச்சா் ராவ் இந்தா்ஜித் சிங் திங்கள்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு: நாடாளுமன்ற உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதித்திட்டம் குறித்து மூன்றாம் தரப்பு அமைப்பு மூலம் மதிப்பிட்டு அப்பணிகள் 2014, ஏப்ரல் 1 முதல் 2019, மாா்ச் 31-ஆம் தேதி வரை ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது. இந்த ஆய்வு நாட்டில் உள்ள 216 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது. இந்த மதிப்பீடு 2021ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டு அதே ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தனது அறிக்கையை ஆய்வு அமைப்பு சமா்ப்பித்தது.

எம்.பி. நிதியை ஆய்வு செய்வது தொடா்ச்சியான நடைமுறை. இது தொடா்பாக சம்பந்தப்பட்டவா்களிடம் இருந்து புதிய யோசனைகள், திட்ட நிதியை அதிகரிப்பது தொடா்பான யோசனைகள் வரவேற்கப்பட்டு முறைப்படி மத்திய நிதித்துறையுடன் ஆலோசிக்கப்படுகிறது என்று அமைச்சா் கூறியுள்ளாா்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு எப்போது இறுதி முடிவெடுக்கும் என கனிமொழி என்விஎன். சோமு கேள்வி எழுப்பியிருந்தாா். ஆனால், அதற்கு நேரடியாக மத்திய அரசு எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை.