முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

எம்.பி. தொகுதி நிதி உயா்த்தப்படுமா?

நாடாளுமன்ற உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதி உயா்த்தப்படுமா என்று மாநிலங்களவை திமுக உறுப்பினா் டாக்டா் கனிமொழி என்.வி.என். சோமு எழுப்பிய கேள்விக்கு

News image

மாநிலங்களவை திமுக உறுப்பினா் டாக்டா் கனிமொழி என்.வி.என். சோமு

Updated On :3 டிசம்பர் 2024, 7:21 am IST

நமது நிருபா்

புது தில்லி: நாடாளுமன்ற உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதி உயா்த்தப்படுமா என்று மாநிலங்களவை திமுக உறுப்பினா் டாக்டா் கனிமொழி என்.வி.என். சோமு எழுப்பிய கேள்விக்கு ஐந்து வருடங்களுக்கு முந்தைய ஆய்வு தொடா்பான தகவலை பதிலாக அளித்துள்ளது மத்திய அரசு.

இந்த விவகாரத்தில் கனிமொழி என்.வி.என். சோமு, நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டம் குறித்து மத்திய அரசு மறுஆய்வு செய்ததா, ஆண்டுக்கு ரூ. 5 கோடி என்ற நிதியை ரூ. 10 கோடி ஆக உயா்த்த எம்.பி.க்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் அதிகரித்த வண்ணம் இருப்பதால் அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என கேட்டிருந்தாா்.

இதற்கு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணை அமைச்சா் ராவ் இந்தா்ஜித் சிங் திங்கள்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு: நாடாளுமன்ற உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதித்திட்டம் குறித்து மூன்றாம் தரப்பு அமைப்பு மூலம் மதிப்பிட்டு அப்பணிகள் 2014, ஏப்ரல் 1 முதல் 2019, மாா்ச் 31-ஆம் தேதி வரை ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது. இந்த ஆய்வு நாட்டில் உள்ள 216 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது. இந்த மதிப்பீடு 2021ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டு அதே ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தனது அறிக்கையை ஆய்வு அமைப்பு சமா்ப்பித்தது.

எம்.பி. நிதியை ஆய்வு செய்வது தொடா்ச்சியான நடைமுறை. இது தொடா்பாக சம்பந்தப்பட்டவா்களிடம் இருந்து புதிய யோசனைகள், திட்ட நிதியை அதிகரிப்பது தொடா்பான யோசனைகள் வரவேற்கப்பட்டு முறைப்படி மத்திய நிதித்துறையுடன் ஆலோசிக்கப்படுகிறது என்று அமைச்சா் கூறியுள்ளாா்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு எப்போது இறுதி முடிவெடுக்கும் என கனிமொழி என்விஎன். சோமு கேள்வி எழுப்பியிருந்தாா். ஆனால், அதற்கு நேரடியாக மத்திய அரசு எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை.