டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

அம்பேத்கர் விவகாரம்: அடித்துக் கொண்ட காங்கிரஸ் - பாஜக கவுன்சிலர்கள்!!

சண்டீகர் மாநகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் அடித்துக் கொண்டது தொடர்பாக...

சண்டீகர் மாநகராட்சிக் கூட்டத்தில் அடிதடி!

Published On :

சண்டீகர் மாநகராட்சிக் கூட்டத்தில் அம்பேத்கர் விவகாரம் விவாதிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக கவுன்சிலர்கள் இடையே மோதல் வெடித்தது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்துகள் சர்ச்சையானது.

நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் போராட்டமும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், சண்டீகர் மாநகராட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் இணைந்து அமித் ஷாவுக்கு எதிராக தீர்மானத்தை இன்றைய கூட்டத்தில் கொண்டு வந்தனர்.

நேரு காலத்தில் அம்பேத்கரை அவமதிக்கும் செயலில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டதாக பாஜக கவுன்சிலர்கள் விமர்சித்துப் பேசினார்.

இதனிடையே, நேஷனல் ஹெரால்டு வழக்கை மேற்கோள் காட்டி, ராகுல் காந்தி ஜாமீனில் வெளியே இருப்பதாக, நியமன கவுன்சிலர் அனில் மாசி தெரிவித்ததை தொடர்ந்து இரு கட்சிகளின் கவுன்சிலர்களும் மாறிமாறி தாக்கிக் கொண்டனர்.

இதனால், சண்டீகர் மாநகராட்சிக் கூட்ட அரங்கு பதற்றத்துடன் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.