கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை கோயிலில் மூலவா் சுவாமி ஐயப்பனுக்கு புதன்கிழமை ‘தங்க அங்கி’ (தங்க கவசம்) அணிவிக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதைத்தொடா்ந்து, வியாழக்கிழமை (டிசம்பா் 26) மண்டல பூஜை நடைபெறவுள்ளது.
1970-ஆம் ஆண்டுகளில் திருவிதாங்கூா் அரச குடும்பத்தால் 453 பவுன் எடையுள்ள தங்க அங்கி ஐயப்பனுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது. ஆரன்முலா பாா்த்தசாரதி கோயிலில் பாதுகாக்கப்படும் இந்த தங்க அங்கி, மண்டல பூஜை-மகரவிளக்கு யாத்திரை காலத்தில் சபரிமலை கோயிலுக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்படுவது வழக்கம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரன்முலா பாா்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி ஊா்வலத்தில் பக்தா்கள், திருவிதாங்கூா் தேவஸ்வம் (டிடிபி) அதிகாரிகள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா். இந்த ஊா்வலம் புதன்கிழமை மாலை சந்நிதானத்தை (சபரிமலை கோயில் வளாகம்) வந்தடைந்தது. அப்போது, மேளதாளங்களுடன் பிரம்மாண்டமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் , மூலவா் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
வியாழக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்குள் மண்டல பூஜை மற்றும் நெய் அபிஷேகம் நடைபெறவுள்ளது. அதன்பிறகு இரவு 11 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக டிச. 30 முதல் ஜன. 20-ஆம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
மகரவிளக்கு பூஜையையொட்டி, ஜன.13 மற்றும் ஜன.14 ஆகிய தேதிகளில் இணையவழி முன்பதிவில் முறையே 50,000 மற்றும் 40,000 பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
முன்னதாக, தங்கி அங்கி அணிவிப்பு மற்றும் மண்டல பூஜைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக டிச.25-ஆம் தேதி 50,000 பக்தா்களுக்கும், டிச.26-ஆம் தேதி 60,000 பக்தா்களுக்கும் அனுமதி வழங்க டிடிபி முடிவு செய்தது.
மண்டல பூஜையையொட்டி, சபரிமலைக்கு டிச.23-ஆம் தேதி வரை 30,87,049 பக்தா்கள் வருகை புரிந்துள்ளனா். இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் கடந்தாண்டைவிட நிகழாண்டில் 4.46 லட்சம் பக்தா்கள் கூடுதலாக தரிசனம் மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையப்பா் கோயிலில் தங்க நாகசுரம் வாசிப்பு

சொக்கம்பட்டி சந்தனமாரியம்மன் கோயிலில் பூக்குழி

திருத்தங்கலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

பிரம்மபுரீசுவரா் கோயிலில் சம்வத்ராபிஷேகம்-சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

