புது தில்லி: முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை(டிச. 26) இரவு 10 மணியளவில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார்.
டாக்டர் மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அன்னாரது இறுதிச்சடங்கு சனிக்கிழமை(டிச.28) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: டாக்டர் மன்மோகன் சிங் மறைவு: தலைவர்கள் இரங்கல்!
இந்த நிலையில், மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக 7 நாள்கள் அரசு தரப்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை(டிச. 27) திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன.
மேலும், காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூடி இரங்கல் கூட்டமும் நடைபெறும். அன்னாரது இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மன்மோகன் சிங்கின் காணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்!
இதேபோல், காங்கிரஸ் தொடக்க தின விழா உள்பட அக்கட்சி சாா்பில் அடுத்த 7 நாள்களுக்கு நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

PTI
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தனியாா் துறையில் 2 நாள்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய தில்லி அரசு அறிவுறுத்தல்

இரு நாள்கள் அரசுப் பணியாளா்கள் வீட்டிலிருந்து பணி: முதல்வா் ரேகா குப்தா

அனுமதியற்ற வாகன நிறுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்: காவல்துறைக்கு துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தல்







