வாரணாசியில் சிறுமியை பாலியல் சீண்டலில், கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் ஒரு பள்ளியருகே 8 வயது சிறுமி ஒருவர் அரை நிர்வாணமாக, இறந்த நிலையில் சாக்குப்பையில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சிறுமியின் உடலை மீட்ட காவல்துறையினர், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியிலிருந்த பல சிசிடிவி கேமராக்களிலும் காவல்துறையினர் சோதனை செய்தனர்.
இந்த சம்பவம் நடந்த பகுதியில் தெரு விளக்குகள் இல்லாததால், விசாரணை கடினமாக இருந்ததாகக் கூறினர். இருப்பினும், ஒரு சிசிடிவி காட்சியில் சிறுமி பதிவாகியிருப்பது தெரிய வந்தது.
அந்த சிசிடிவி காட்சியில், சிறுமியைப் பின்தொடரும் ஒருவர், திரும்பி வருகையில் கையில் ஒரு சாக்குப் பையுடன் வருவது தெரிகிறது. விசாரணையில், சிறுமியை பின்தொடர்ந்தவர் இர்ஷாத் என்பவர் கண்டறியப்பட்டு, அவரை கைது செய்ய சென்றபோது, காவல்துறையினர் மீது இர்ஷாத் துப்பாக்கிச்சூடு நடத்த முற்பட்டார்.
இருப்பினும், இர்ஷாத் கைது செய்யப்பட்டார். விசாரணையில், கொசுவர்த்தி வாங்குவதற்காகச் சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதுடன், சிறுமி சப்தமிட்டு கூச்சலிட்டதால் கொலை செய்ததும் தெரிய வந்தது.
இதையும் படிக்க: இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக்கப்படும்: ஆம் ஆத்மி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! இளைஞர் கைது!

சிறுமியை திருமணம் செய்த கட்டடத் தொழிலாளி! போக்சோ சட்டத்தில் கைது!

சிறுமியை மணந்த இளைஞா் போக்ஸோவில் கைது

போக்சோ வழக்கு: இருவருக்கு 5 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


