நொய்டா: அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்த பெண் உயிரிழப்பு!

நொய்டாவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்ததாகக் கூறப்பட்ட பெண் உயிரிழந்தார் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

நொய்டா: நொய்டாவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்ததாகக் கூறப்பபட்ட பெண் உயிரிழந்தார் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். 

52 வயதான பெண் தனது கணவருடன் பிஸ்ராக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சஷீல் பசுமை -1 சமூகத்தில் உள்ள ஆறாவது மாடியில் வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலையில் அந்த பெண் தனது அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்ததாக உள்ளூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அந்த பெண் தீவிர நடவடிக்கை எடுத்ததன் பின்னணியில் உள்ள காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது குறித்து வழக்கு பதித்த நிலையில், சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com