விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த ஆசிரியர்!

மத்தியப் பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவர் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்து நிதானமின்றி படிக்கட்டில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :4 பிப்ரவரி 2024, 1:28 pm

DIN

மத்தியப் பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவர் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்து நிதானமின்றி படியில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பள்ளி மாணவர்கள் எடுத்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருவதைத் தொடர்ந்து, ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபால்பூர் பகுதியில் ஜமுனியா அரசு ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் புதிதாக பணியில் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். 

அதிகமாக குடித்ததால் நிதானமிழந்து பள்ளியின் படியில் விழுந்து கிடந்துள்ளார். இதனைப் பள்ளி மாணவர்கள் விடியோ எடுத்துள்ளனர். இந்த விடியோ குறித்து அறிந்த பள்ளிக்கல்வித் துறை, ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. 

ஆசிரியர் குடித்துவிட்டு பள்ளிக்கு வருவது இது முதல்முறை இல்லை என்றும், அடிக்கடி இவ்வாறு நடைபெறுவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 

மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து நல்வழிப்படுத்தும் ஆசிரியர் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்த சம்பவம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.