மத்தியப் பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். 60 பேர் காயமடைந்துள்ளனர்.
ம.பி.யின் ஹர்தா என்ற இடத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் விபத்தில் கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளது. விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். 60 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தீ விபத்துக்கு அந்த மாநில முதல்வர் மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதய் பிரதாப் சிங், டிஜிபி, ஊர்க்காவல்படை அரவிந்த் குமார் ஆகியோர் ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்திற்குச் சென்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்து அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவத் தொடங்கியதால் நிலைமை தீவிரமடைந்துள்ளது. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.