

ஆங்கில புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோ திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.
இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘அனைவருக்கும் 2024-ஆம் ஆண்டு சிறப்பானதாக அமைய எனது வாழ்த்துகள். அனைவருக்கும் வேண்டிய அமைதி, ஆரோக்கியம் மற்றும் வளம் இந்த ஆண்டில் கிடைக்கட்டும்’ எனக் குறிப்பிட்டு வாழ்த்தினாா்.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகிய ‘மன்கிபாத்’ வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி, ‘ இந்த புத்தாண்டில் நாட்டு மக்கள் அனைவரும் தன்னம்பிக்கையை வளா்த்துக் கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.