சண்டிகர்: பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மருத்துவர்களாகவோ, பொறியாளர்களாகவோ அல்லது பட்டய கணக்காளர்களாகவோ உருவாக்க விரும்புவர்கள் இனி அவர்களை அரசியல்வாதியாக ஆக்கவும் பரிசீலிக்க வேண்டும் என்று ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் இன்று தெரிவித்தார்.
நல்லாட்சிக்கு திறமையான அரசியல்வாதிகள் முக்கியமானவர்கள், நல்ல தலைவர்கள் இருந்தால் நாடு வேகமாக முன்னேறும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை டாக்டர், இன்ஜினியர், பட்டய கணக்காளர்களாகவோ ஆக ஆசைப்படுவதுடன், அவர்களை நல்ல அரசியல்வாதியாகவும் உருவாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
அம்பாலா கண்டோன்மென்டில் உள்ள ஒரு பள்ளியில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அனில் விஜ், நாட்டின் வளர்ச்சிக்காக சமூக ஊடகங்கள் மற்றும் நமோ செயலி மூலம் இளைஞர்களுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய அனில் விஜ், வாக்காளர்கள் ஜனநாயகத்தின் அடித்தளம் என்றும், அதில் அவர்களின் பங்கேற்பு அவசியம் என்றும் தெரிவித்தார். அதே வேளையில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றிய தனது கல்லூரி நாட்களை அனில் விஜ் நினைவு கூர்ந்தார்.
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான பிரதமர் மோடியின் தீர்மானத்தை அனைவரும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், வலுவான கொள்கைகள் மற்றும் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்பு கொண்ட கட்சி என்று பாஜகவை பாராட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ஜூலை 31 செய்திகள் - நேரலை!
தவறான வாட்ஸ் ஆப் தகவலைப் பரப்பும் மு.க. ஸ்டாலின்: அமைச்சர் நிர்மல் குமார்

ராகுல் நாளை சென்னை வருகை! முதல்வர் விஜய்யை சந்திக்கிறாரா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 31) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



