மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மும்பை தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

தெற்கு மும்பையில் உள்ள மரச் சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 வயது நபர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்ததாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

News image
கோப்புப் படம்.
Updated On :26 ஜனவரி 2024, 4:46 pm

DIN


மும்பை: தெற்கு மும்பையில் உள்ள மரச் சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 வயது நபர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்ததாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கிராண்ட் சாலை பகுதியின் சோர் பஜார் பகுதியில் அமைந்துள்ள லக்டா பஜாரில் அதிகாலை 2 மணியளவில் தொடங்கிய தீ கிட்டத்தட்ட பத்து மணி நேரத்திற்குப் பிறகு அணைக்கப்பட்டது.

மீட்புப் பணியின் போது சடலமாக மீட்கப்பட்டவர் தன்ஷியாம் பிரஜாபதி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சந்தையின் தரை மற்றும் முதல் தளங்களில் உள்ள மர இருப்பு, ரசாயனங்கள் மற்றும் மின்சார வயரிங் ஆகியவற்றுக்கு தீ பரவியதால் அருகிலுள்ள கடைகள் மற்றும் ஹோட்டல்களையும் சேதப்படுத்தியது. தீயை அணைக்க 20 தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.