ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கேரள ஆளுநருக்கு கூடுதல் பாதுகாப்பு அளித்த மத்திய உள்துறை அமைச்சகம்!

மத்திய உள்துறை அமைச்சகம் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கியுள்ளது. 

News image
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்
Updated On :27 ஜனவரி 2024, 10:10 am

DIN

மத்திய உள்துறை அமைச்சகம் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு இஸட் பிளஸ் (Z+) பாதுக்காப்பு வழங்கியுள்ளது. 

முகமது ஆரிப் கானுக்கும், ஆளுநர் மாளிகைக்கும் இந்த இஸட் பிளஸ் பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளத்தாக ஆளுநர் அலுவலகம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

கேரள ஆளுநரின் வருகையின்போது இடதுசாரி மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ உறுப்பினர்கள் கருப்புக்கொடி காட்டி அவரது வருகைக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். கருப்புக் கொடி காட்டியவர்களைக் கைது செய்யக்கோரி கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சாலையோரமாக தர்ணாவில் ஈடுபட்டார்.

இரண்டு மணிநேரம் தர்ணாவில் ஈடுபட்ட ஆளுநர், 17 எஸ்எஃப்ஐ உறுப்பினர்கள் மீது வழக்கு பதியப்பட்டதற்கான ஆவணத்தின் நகலைப் பார்த்த பின்னரே அங்கிருந்து கிளம்பினார். இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆளுநருக்கு இந்த இசட் பிளஸ் பாதுகாப்பை வழங்கியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.