பிகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவிடம் 8 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
ரயில்வே பணிக்கு லஞ்சமாக குறைந்த விலையில் நிலங்களை பெற்றதாக பதிவான வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக நேற்று தேஜஸ்வி யாதவின் தந்தையும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில் இன்று (ஜன. 30) தேஜஸ்வியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. லாலு பிரசாத் யாதவிடம் நேற்று 10 மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.
விசாரணை நடத்தப்பட்ட பாட்னாவிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகம் முன்பு தேஜஸ்வி யாதவின் ஆதரவாளர்கள் கூடி முழக்கங்களை எழுப்பினர். விசாரணை முடியும் வரை அவரின் தொண்டர்கள் அலுவலகம் வெளியே குவிந்திருந்தனர்.
அமலாக்கத் துறையின் 8 மணிநேர விசாரணைக்குப் பிறகு தேஜஸ்வி யாதவ் பாட்னா அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தன்னை இயேசுவாக சித்தரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை: வைகோ

தங்கம், வெள்ளி விலை குறைவு: இன்றைய நிலவரம்!

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


