இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆந்திரத்திற்கு வரிச்சலுகை: சந்திரபாபு நாயுடு கோரிக்கை!

ஆந்திரத்தில் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு வரிச்சலுகை வேண்டும் என்று ஆந்திர முதல்வர் கோரிக்கை

News image
- dot com
Updated On :4 ஜூலை 2024, 10:24 am

DIN

ஆந்திரப் பிரதேசத்திற்கு வரிச்சலுகை வழங்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தில் நிலவி வரும் நிதிநெருக்கடி குறித்து ஆலோசிப்பதற்காக சந்திரபாபு நாயுடு இன்று (ஜூலை 4) காலை தில்லி சென்றிருந்தார். பிரதமரைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு, ஆந்திரத்தில் நிலவும் நிதிநெருக்கடியைச் சமாளிப்பதற்காக, வரிச்சலுகை வேண்டும் என்று பரிசீலித்துள்ளார். இதன்மூலம், ஆந்திரத்தின் நிதிநெருக்கடி கட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது.

பிரதமரைச் சந்தித்த பின்னர், மத்திய அமைச்சர்களான பியூஷ் கோயல் மற்றும் நிதின் கட்கரியையும் சந்தித்துள்ளார்.

இதுகுறித்துதெலுங்கு தேசக்கட்சி அளித்துள்ள தகவல்களின்படி, கடந்த ஆட்சியான ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.சி.பி. ஆட்சியின்போது, மார்ச் 31, 2024-ன் வரையில் ஆந்திரத்தின் மொத்த நிதிப் பற்றாக்குறை ரூ.55,817.50 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2014 முதல் 2019 வரையிலான தெலுங்கு தேசக்கட்சி ஆட்சியின்போது இருந்த நிதிப் பற்றாக்குறையைவிட 57 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

மேலும், மக்களவைத் தேர்தலின்போது, ஆந்திரத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோரி தெலுங்கு தேசக்கட்சி வலியுறுத்தியிருந்தது. ஆனால், இப்போது ஒடிசா மற்றும் பிகாரும் சிறப்பு மாநில அந்தஸ்தைக் கோருவதால், ஆந்திரத்திற்கு வரிச்சலுகை கோரலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.