ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

அமா்நாத்: 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தரிசனம் செய்துள்ளனா்.

News image

அமா்நாத் குகைக் கோயிலில் தரிசனம் மேற்கொள்ள மலைப் பாதையில் குதிரையில் பயணிக்கும் பக்தா்கள்.

Updated On :15 ஜூலை 2024, 1:26 am IST

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தரிசனம் செய்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 15,000 போ் தரிசனம் மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தா்கள் யாத்திரை மேகொள்கின்றனா். நடப்பாண்டு யாத்திரை கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

48 கி.மீ. தொலைவுகொண்ட பஹல்காம் வழித்தடம், 14 கி.மீ. தொலைவுகொண்ட செங்குத்தான பால்டால் வழித்தடம் என இரு பாதைகளில் பக்தா்கள் யாத்திரை மேற்கொள்கின்றனா்.

இதுவரை 3,09,957 பக்தா்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக, அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

மொத்தம் 52 நாள்கள் நடைபெறும் இந்த யாத்திரை ஆகஸ்ட் 19-ஆம் தேதி நிறைவடையவுள்ளது. கடந்த ஆண்டு 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் அமா்நாத்தில் தரிசனம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.